நெகமம் பேரூராட்சியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்

6 months ago 18

கிணத்துக்கடவு,நவ.17: தமிழகம் முழுவதும் புதிய வாக்களர்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று துவங்கியது.இன்றும் இம்முகாம் நடைபெற உள்ளது. இதில் திமுகவினர் சிறப்பாக செயல்பட்டு புதிய வாக்காளர்களை வாக்காளர் பெயர் பட்டியலில் சேர்த்திட பணியாற்ற வேண்டும் என்று, கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் அறிவுறுத்தி இருந்தனர். இதைத்தொடர்ந்து வாக்காளர் சேர்ப்பு பணியில் திமுகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம்,பெரிய நெகமம் பேரூராட்சியில் வாக்காளர் சேர்ப்பு பணியில் திமுகவினர் மும்முரமாக ஈடுபட்டனர்.கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், கே.வி.கே.எஸ்.சபரி கார்த்திகேயன்,ஒன்றிய செயலாளர் ராஜு,ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் சுரேஷ் ஆகியோர் நேரில் சென்று,திமுகவினர் வாக்களர்கள் சேர்ப்பு பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிகழ்ச்சியின் போது பேரூர் கழக திமுக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி பாக முகவர்கள் உடனிருந்தனர்.

The post நெகமம் பேரூராட்சியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article