
மும்பை,
மகாராஷ்டிரா மாநிலம் பிம்பிரி மருத்துவமனையில், உறங்கிக்கொண்டிருந்த இளைஞர் தவறுதலாக விழுந்த ஆணிகளை விழுங்கிவிட்டதாக கூறி சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். மருத்துவர்கள் ஸ்கேன் செய்தபோது நுரையீரல் மற்றும் வயிறு பகுதியில் ஆணிகள் இருந்தது.
உடனடியாக சுமார் 3 மணிநேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆணிகள் வெளியே எடுக்கப்பட்டன. இதனால் 19 வயது இளைஞரின் உயிர் காப்பாற்றப்பட்டது. மருத்துவ குழுவினருக்கு இளைஞரின் பெற்றோர் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.