நீலகிரியில் சற்று குறைந்தது மழையின் தாக்கம்: சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு

1 month ago 11

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்ததால் ஊட்டி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 4 நாட்களாக ஊட்டியில் பலத்த மழை பெய்தது. இடைவிடாது மழை பெய்ததால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து சாலையில் விழுந்தன.

தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் மரங்களை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர். மரங்கள் மீது மின்கம்பங்கள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. பார்சன்ஸ் வேலி பகுதியில் மரங்கள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டு, ஊட்டியின் முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ் வேலி அணையிலிருந்து குடிநீர் விநியோகம் தடைப்பட்டது. மின் வாரியத்தினர் தொடர்ந்து மின் இணைப்பை சீரமைத்து வருகின்றனர். இதனால், 5 நாட்களாக ஊட்டி நகருக்கு தண்ணீர் வரவில்லை.

Read Entire Article