நீலகிரியில் கான்கீரிட்டால் மூடப்பட்ட கிணற்றில் விழுந்து தத்தளித்த இரு கரடிகளை ஏணி உதவியுடன் மீட்ட வனத்துறை

4 months ago 16

நீலகிரி: இன்று 18.01.2025 முற்பகல் சுமார் 11.00 மணியளவில், நீலகிரி வனக்கோட்டம், கோத்தகிரி வனச்சரகம், கோத்தகிரி பிரிவு, கொணவக்கரை சுற்று ஆளுமை எல்லைக்குட்பட்டதும், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், ஜக்கனாரை கிராமம், தும்பூர் என்ற குக்கிராமத்திற்கு அருகிலுள்ளதுமான கிணற்றில், இரண்டு கரடிகள் விழுந்து, தண்ணீரில் தத்தளிப்பதாக தகவல் கிடைக்கப் பெற்று, உடனடியாக கோத்தகிரி வனத்துறையினர் சம்பவ இடத்தில் தணிக்கை செய்தனர்.

தணிக்கையில் அக்கிணறானது, ஜக்கனாரை கிராம ஊராட்சிக்குச் சொந்தமான ஆழமான கிணறு என்பதும், மேல்பாகம் கான்கிரீட்டால் முழுமையாக மூடப்பட்டதும், அதிலுள்ள 2′ x 2′ அளவுள்ள திறப்பு வழியாக தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளதும், கிணற்றிலுள்ள தண்ணீரில் தத்தளித்துக் கொண்டுள்ளதும் தெரியவந்தது. உடனடியாக இரண்டு ஏணிகளை இணைத்து, கிணற்றுக்குள் வைத்து கட்டிய பின்பு, மதியம் சுமார் 1.45 மணியளவில், அந்த ஏணி வழியாக இரண்டு கரடிகளும் ஒன்றன் பின் ஒன்றாக மேலே ஏறி, கிணற்றுக்கு வெளியில் வந்து, தேயிலை தோட்டம் வழியாக புதர் பகுதிக்குள் பத்திரமாகச் சென்றுவிட்டது. மேலும் அக்கரடிகள் இரண்டையும் வனப் பகுதிக்குள் அனுப்பும் பணியில் கோத்தகிரி வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

The post நீலகிரியில் கான்கீரிட்டால் மூடப்பட்ட கிணற்றில் விழுந்து தத்தளித்த இரு கரடிகளை ஏணி உதவியுடன் மீட்ட வனத்துறை appeared first on Dinakaran.

Read Entire Article