நீலகிரியில் அரசு பேருந்தில் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு தடைவிதிப்பு!!

2 months ago 12

நீலகிரி: நீலகிரி மாவட்டத்துக்கு வரும் அரசு பேருந்துகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பட்டில்கள், கேரி பேக்குகள் எடுத்து வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் எடுத்து வர உதகை மண்டல போக்குவரத்துக்கழகம் தடை விதித்தது. சமீப காலமாக அரசு பேருந்துகளில் வரும் பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுத்து வருவதாக புகார் எழுந்தது. பிளாஸ்டிக் பாட்டில் எடுத்து வருகின்றனரா என்று சோதனை செய்யாவிட்டால் நடத்துனர், ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நீலகிரியில் அரசு பேருந்தில் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு தடைவிதிப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article