நீர்வளத்துறை சார்பில் பேரிடர் மீட்பு பணிக்கு 147 பொறியாளர்களை கொண்ட அவசரகால வெள்ள மீட்பு குழு

3 months ago 14

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த மாதத்தில் பருவமழை இயல்பைவிட அதிகமாகப் பொழிந்துள்ளது. இந்த நிலையில், பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு துறையின் சார்பில் அவசரகால வெள்ள மீட்பு குழுக்கள் அமைக்கப்படும். அந்த அடிப்படையில், நீர்வளத் துறையிலும் பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசரகால வெள்ள மீட்பு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. நீர்வளத் துறையின் 147 பொறியாளர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக மண்டல கண்காணிப்பு பொறியாளர்கள் செயல்படுவார்கள். இக்குழுவினர் இயற்கை பேரிடர் ஏற்படும் பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வார்கள்.

Read Entire Article