
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு அடிதடி, கொலை போன்ற வழக்குகளில் ஈடுபட்ட வீரவநல்லூரை சேர்ந்த வேல்துரை(எ) பார்த்திபன் (வயது 28) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 1/2 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் வேல்துரை(எ) பார்த்திபனுக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து வேல்துரையை வீரவநல்லூர் காவல்துறையினர் தேடி வந்த நிலையில் நேற்று (16.6.2025) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.