நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம் வெகுவாக வீணடிப்பு : ஐகோர்ட் வேதனை

2 hours ago 1

சென்னை :நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக, வழக்கு விசாரணையின்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் வேதனை கருத்து தெரிவித்துள்ளார். நிலம் எடுப்பான பற்றிய இழப்பீட்டை உயர்த்தி தர நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி, “நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அரசு அதிகாரி மீது எந்த கருணையும் காட்ட முடியாது. 60% நீதிமன்ற நேரம் அரசு அதிகாரிகள் தொடர்பான வழக்குகளிலும், 25% அரசியல் வாதிகள் தொடர்பான வழக்குகளிலும் செலவிடப்படுகிறது, வெறும் 7% நேரம் மட்டுமே பொதுமக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நிலை உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம் வெகுவாக வீணடிப்பு : ஐகோர்ட் வேதனை appeared first on Dinakaran.

Read Entire Article