நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆக. 4-ல் நேரில் ஆஜராக வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு

5 hours ago 3

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆக. 4-ல் நேரில் ஆஜராக வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 1991-ல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பலரை பணியில் அமர்த்தியது தமிழக அரசு; பின்னர் பணி நீக்கம் செய்தது. தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வழக்கு தொடர்ந்தனர். மாற்று பணி வழங்க தமிழக அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவு; உத்தரவை ஐகோர்ட், உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. சேக் அப்துல், அழகேசன், சர்மிளா உள்பட 16 பேருக்கு வணிக வரித்துறையில் இளநிலை உதவியாளர் பணி என 16 பேரின் பணியை கடந்த 2004 முதல் வரையறை செய்து கடந்த 2010-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

16 பேரின் பெயர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கவில்லை; பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் 16 பேர் வழக்கு தொடர்ந்தனர். பழைய ஓய்வூதிய திட்டத்தின் பெயர்களை சேர்க்க வேண்டும் என்று 2024 பிப்ரவரியில் ஐகோர்ட் உத்தரவிட்டது. உத்தரவை தமிழ்நாடு அரசு அமல்படுத்தவில்லை. என கூறி 16 பேர் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆக. 4-ல் நேரில் ஆஜராக வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆக. 4-ல் நேரில் ஆஜராக வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article