நீதித்துறை சிறப்பாக செயல்பட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அழைப்பு

4 months ago 15

மதுரை: ‘நீதித்துறை சிறப்பாகச் செயல்பட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பொறுப்பேற்ற பின், முதல் முறையாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், நேற்று முதல் அமர்வில் வழக்குகளை விசாரித்தார். முன்னதாக, தலைமை நீதிபதிக்கு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், மகா சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், எம்பிஏ பொதுச் செயலாளர் வெங்கடேசன், பார் அசோசியேஷன் தலைவர் ஐசக் மோகன்லால், பெண் வழக்கறிஞர் சங்க தலைவர் ஆனந்தவல்லி ஆகியோர் பேசினர்.

Read Entire Article