நில அளவீடுக்கு பொது சேவை மையங்களில் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்

2 months ago 6

 

கிருஷ்ணகிரி, மார்ச் 1: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளைவ செய்ய பொது சேவை மையங்களை அணுகி, நில அளவை கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நில உரிமையாளர்கள் தங்களின் நிலங்களை அளவீடு செய்ய சம்மந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்ப்பித்து வந்த நிலையில், வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி, தமிழக முதல்வரால் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய “எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்” நில அளைவ கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், Citien Portal மூலமாக இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க, ஏற்கனவே வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது இச்சேவையினை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொதுசேவை மையங்கள் (இ-சேவை) மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில், இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய, பொதுசேவை மையங்களை அணுகி, நிலஅளவை கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க இயலும்.

நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது செல்போன் வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட அறிக்கை வரைபடம் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணைவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். எனவே, பொதுமக்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.

 

The post நில அளவீடுக்கு பொது சேவை மையங்களில் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article