நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்க போக்குவரத்து ஓய்வூதியர்கள் கோரிக்கை

2 months ago 10

சென்னை: நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்க வேண்டும் என போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர், துணை முதல்வர், போக்குவரத்து அமைச்சர் உள்ளிட்டோர் அலுவலகங்களில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க நிர்வாகிகள் இன்று (நவ.5) அளித்துள்ள மனுவின் விவரம்: “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமூக நீதி கொள்கைப்படி, அவரால் உறுவாக்கப்பட்ட போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், பொருளாதார வறுமையில் தவித்து வருகிறோம்.

Read Entire Article