நிர்வாக காரணங்களால் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் தேதி மாற்றம்

2 months ago 11

 

தஞ்சாவூர், நவ. 20: நிர்வாக காரணங்களால் தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் வேறு தேதி க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தஞ்சாவூர் ஆர்டிஓ இலக்கியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 21ம் தேதி (வியாழக்கிழமை) அன்று நடக்கவிருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டு 22ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 10 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர் திருவையாறு, பூதலூர் மற்றும் ஓரத்தநாடு வட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடையலாம்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post நிர்வாக காரணங்களால் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் தேதி மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article