நியாயவிலைக் கடை பணியாளர்களை போட்டித் தேர்வின் மூலம் நியமிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

5 months ago 29

விழுப்புரம்: “தமிழகத்தில் நியாயவிலைக் கடை பணியாளர்களை நேரடி நியமனம் இல்லாமல் போட்டித் தேர்வின் மூலமே நியமிக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (அக்.10) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நியாயவிலைக் கடைகளுக்கு தமிழக அரசு நியமனம் செய்ய உத்தேசித்துள்ள பணியாளர்களை நேரடி நியமனமாக இல்லாமல் போட்டித் தேர்வு மூலம் நியமிக்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் மாவட்ட வாரியாக விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்காக சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட உள்ளனர்.

Read Entire Article