நியாயவிலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி

2 weeks ago 2

 

தஞ்சாவூர், ஜன.25: தஞ்சாவூர் மாவட்டத்தில் விநியோகிக்கப்படும் செறிவூட்டப்ட்ட அரிசியை பொதுமக்கள் வாங்கி பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் மாநில அரசானது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கும் நியாய விலை அங்காடிகள் மூலம் ஆரோக்கியம் மற்றும் சத்து நிறைந்த அரிசியான செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கி வருகிறது. இதனை பிளாஸ்டிக் அரிசி என கருதாமல் எவ்வித அச்சமுமின்றி பொது மக்கள் அனைவரும் இந்த செறிவூட்டப்பட்ட அரிசியினை வாங்கி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

The post நியாயவிலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி appeared first on Dinakaran.

Read Entire Article