சென்னை: நிதி நிறுவன மோசடியில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி, ஏடிஜிபி, உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நிதி நிறுவன மோசடியால் மக்கள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும்; நிதி நிறுவன மோசடியை தடுப்பது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஆலோசனை நடைபெறுகிறது.
The post நிதி நிறுவன மோசடி கடும் தண்டனை விதிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.