சென்னை: நிதி நிறுவன மோசடியில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிப்பது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை, தலைமை செயலகத்தில் இன்று காலை நிதி நிறுவன மோசடியில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்கும் வகையில், உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் டிஜிபி, ஏடிஜிபி, உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், நிதி நிறுவன மோசடியால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும், நிதி நிறுவன மோசடியை தடுப்பது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஆலோசனை வழங்கினார்.
The post நிதி நிறுவன மோசடி கடும் தண்டனை விதிப்பது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.