நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரி சோதனை

2 months ago 14

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் நிதி நிறுவன அதிபர் செந்தில்குமார் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. சத்திரப்பட்டியில் உள்ள செந்தில்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரி சோதனைக்கு ஆளாகி உள்ள செந்தில்குமார், பாஜக நிர்வாகிகளுக்கு நெருக்கமானவர் என தகவல் வெளியாகியுள்ளது. செங்கல் சூளை மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்களை செந்தில்குமார் நடத்தி வருகிறார்.

The post நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரி சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article