நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? - முதல்வர் விளக்க புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் கோரிக்கை

3 hours ago 2

புதுச்சேரி: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து முதல்வர் ரங்கசாமி மக்களுக்கு விளக்க வேண்டும் என்று புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மாநில வளர்ச்சி, திட்ட செயல்பாடுகள், மாநிலத்துக்கான நிதி ஆதாரங்கள் போன்றவைகளை விவாதிக்கும் வாய்ப்பாக நிதி ஆயோக் கூட்டம் பயன்பட்டு வருகிறது. பின்னடைவாக இருக்கும் பல மாநிலங்கள் தங்களுடைய நிதி ஆதாரங்களை உயர்த்தி கேட்கும் கோரிக்கைகளை முன் வைப்பதற்கு இந்த கூட்டம் பயன்பட்டு வருகிறது.

Read Entire Article