செங்கல்பட்டு, ஜன.23: விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கவுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 24.1.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம்.
The post நாளை விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.