![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38074047-chennai-16.webp)
புதுடெல்லி,
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி 3 நாள் சுற்றுப்பயணமாக வயநாட்டிற்கு நாளை (சனிக்கிழமை) செல்கிறார். நாளை முதல் 10-ந் தேதி வயநாட்டில் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். சட்டமன்ற தொகுதி வாரியாக காங்கிரஸ் கட்சியில் உள்ள வாக்குச்சாவடி தலைவர்கள், முகவர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்துகொண்டு பேசுகிறார்.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மானந்தவாடி அருகே 4-ம் மைல் பகுதியில் உள்ள அரங்கில் வாக்குச்சாவடி தலைவர்கள், முகவர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துரையாடுகிறார். பின்னர் மதியம் 12 மணிக்கு சுல்தான்பத்தேரியில் நடைபெறும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பேசுகிறார்.
தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரியங்கா காந்தி பங்கேற்கிறார். 10-ந் தேதி வயநாட்டில் இருந்து டெல்லி திரும்புகிறார்.