ராமேசுவரம்: பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை தர உள்ளதை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயில் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், ராமேசுவரம்-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரையிலும் வாகனங்களுக்கு அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.