நாளை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

1 month ago 7

 

திருவள்ளூர், ஜன. 1: திருவள்ளூரில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடைபெற உள்ளது என மின்வாரிய செயற் பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மின்வாரிய செயற் பொறியாளர் ஆர்.கனகராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருவள்ளூர், பெரியகுப்பத்தில் உள்ள மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்கூட்டம் நாளை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

திருவள்ளூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஏ.சேகர் தலைமை தாங்கி மின் நுகர்வோர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு தீர்வு காண உள்ளார். எனவே திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் மின்துறை சம்பந்தமான புகார்களை நேரில் தெரிவிக்கலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

The post நாளை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article