சென்னை: பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு மக்கள் பஸ், ரயில்கள், கார், விமானம் மூலம் பயணம் செய்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை 3 நாளில் மட்டும் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் (13ம் தேதி) சொந்த விடுப்பு எடுத்தால், முன்னதாக 11ம் தேதி (சனிக்கிழமை), நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறைகளையும் சேர்த்து மொத்தம் 9 நாட்கள் விடுமுறை ஆகிவிடும் சூழ்நிலை உள்ளது.
இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் சென்னையில் வசிப்போர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ெதாடங்கினர். இதனால் வெள்ளிக்கிழமை முதல் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. நேற்று முன்தினமும் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. நேற்றும் நிறைய பேர் சொந்த ஊர்களுக்கு காலை முதல் புறப்பட்டு சென்றனர். இதனால் நேற்றும் சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ஹவுஸ் புல் ஆகியிருந்தது. நிறைய பேர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர். கூட்ட ெநரிசலை தவிர்கும் வகையில் விடப்பட்ட சிறப்பு ரயில்களும் ஹவுஸ்புல் ஆகியுள்ளன. இன்று போவதற்காக தட்கல் டிக்கெட் விநியோகம் நேற்று தொடங்கியதும். இந்த டிக்கெட்டும் 5 நிமிடத்தில் விற்று தீர்ந்தது. மேலும் மக்கள் பஸ், கார்களிலும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இதனால், நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கடும் நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் கடந்த 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை (இன்று) 21,904 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் மட்டும் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் சென்றுள்ளனர். வெள்ளி, சனி 2 நாட்களில் ரயில்களில் சுமார் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். விமானங்கள் மூலம் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். ஆம்னி பஸ் மற்றும் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் 3.5 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 12 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். நேற்றும் சென்னையில் இருந்து சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் ரயில், பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்றனர். இதையடுத்து தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் சொந்த ஊர்களுக்கு 15 லட்சம் பேர் சென்றுள்ளனர். இன்றும் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் செல்ல வாய்ப்புள்ளது. இதனால், ரயில் நிலையம், பஸ்நிலையங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தை திங்கள் முதல் நாளான பொங்கல் பண்டிகையன்று விதமாக வீடுகளில் வண்ண கோலமிட்டு, தோரணம் கட்டி, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி புத்தாடை வாங்குவதற்காக கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதியது. அடுத்து, பொங்கல் பண்டிகை அன்று, அனைத்து வீடுகளிலும் கரும்பு, மஞ்சள் வைத்து கொண்டாடுவார்கள். இதனால் நேற்று கரும்பு, மஞ்சள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்தனர். 15 எண்ணிக்கை கொண்ட ஒரு கரும்பு கட்டு கோயம்ேபடு மார்க்கெட்டில் ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்பட்டது. இதே கரும்பு ஊர்களில் ரூ.550 முதல் ரூ.600 வரை விற்கப்பட்டது. அதன்படி ஒரு கரும்பு ரூ.15 முதல் ரூ.25 வரை தரத்திற்கு ஏற்றார் போல் விற்கப்பட்டது. அதேபோல் மஞ்சள் விற்பனையும் அமோகமாக நடந்தது. மஞ்சள் கொத்து ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனையானது. மேலும் வாழைக் கன்று, மண்பானை, வாழை இலை, மாங்கொத்து தோரணம், பழவகைகள், பூக்கள் உள்ளிட்ட விற்பனையும் களைக்கட்ட தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையின் முதலாம் நாள் போகிப் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. போகி மேளம் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
The post நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் பஸ், ரயில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்: வாகனங்களால் கடும் ேபாக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.