நாளை கல்லறை திருநாள் முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்தது

3 months ago 14

அண்ணாநகர்: நாளை கல்லறை திருநாளை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லி 900க்கும் ஐஸ் மல்லி 800 க்கும் முல்லை மற்றும் ஜாதி மல்லி 500 க்கும் கனகாம்பரம் 1000 க்கும் விற்பனை செய்யப்பட்டது. அரளி பூ 150 க்கும் சாமந்தி 120 க்கும் சம்பங்கி 80 க்கும் பன்னீர்ரோஸ் 90 க்கும் சாக்லேட் ரோஸ் 150 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நாளை கல்லறை திருநாளை முன்னிட்டு இன்று காலை மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இதன்படி ஒரு கிலோ மல்லி 1200க்கும் ஐஸ் மல்லி 1000 க்கும் முல்லை மற்றும் ஜாதி மல்லி 800 க்கும் கனகாம்பரம் 100க்கும் சாமந்தி 120 க்கும் சம்பங்கி 130க்கும் அரளி பூ 300க்கும் பன்னீர் ரோஸ் 90க்கும் சாக்லேட் ரோஸ் 120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘’தீபாவளி முன்னிட்டு கடந்த 2 நாட்களாக அனைத்து பூக்களின் விலை உயர்ந்தது. நாளை கல்லறை திருநாள் என்பதால் மீண்டும் அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது’ என்றார்.

The post நாளை கல்லறை திருநாள் முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்தது appeared first on Dinakaran.

Read Entire Article