சென்னை: நாராயணசாமி நாயுடு பிறந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். “உழவர்களுக்காக உயிரையே தந்து உழைத்த நாராயணசாமி நாயுடுவின் தியாகத்தை போற்றுகிறேன். 1925-ல் பிறந்த நாராயணசாமி நாயுடு, 1984-ல் மறையும் வரை வாழ்க்கையை உள்ளவர்களுக்காகவே அர்ப்பணித்தவர். நாராயணசாமி நாயுடுவின் முயற்சி காரணமாக பல்வேறு மாநிலங்களில் உழவர் சங்கங்கள் உருவானது” என நாராயணசாமி நாயுடு நூற்றாண்டையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
The post நாராயணசாமி நாயுடு பிறந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.