நாயை காப்பாற்ற முயன்ற மாணவர் நீரில் மூழ்கி பலி: கண்கள் தானம்

1 week ago 3

திருப்பூர்: வளர்ப்பு நாயை காப்பாற்ற முயன்று குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெரியார் நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி நாச்சம்மாள். இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் மணிகண்டன் (14). இவர் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார்.

இந்நிலையில் நேற்று மணிகண்டன் மற்றும் சகோதரிகள் அப்பகுதியில் உள்ள குட்டை பகுதியில் விளையாடி விட்டு வீடு திரும்பிய போது அவர்களது வளர்ப்பு நாய் குட்டை பகுதிக்கு சென்றது. நாய் குட்டைக்குள் விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் மணிகண்டன் நாயை காப்பாற்ற முயன்றபோது, தவறி 12 அடி ஆழ குட்டைக்குள் விழுந்தார்.

இதனை பார்த்த சகோதரிகள் கதறி அழுகவே அப்பகுதியில் இளைஞர்கள் திரண்டு சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்துக்கு பின் மாணவரை மீட்டனர். பின்னர், பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் எடுத்து சென்ற போது மாணவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக பல்லடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். உயிரிழந்த மாணவரின் கண்கள் தானம் செய்யப்பட்டன.

The post நாயை காப்பாற்ற முயன்ற மாணவர் நீரில் மூழ்கி பலி: கண்கள் தானம் appeared first on Dinakaran.

Read Entire Article