சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மை காலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில பொறுப்பு முதல் ஒன்றியம் வரையிலான பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து விலகிய வண்ணம் இருக்கின்றனர். இதற்கு அவரவர் தரப்பில் பல்வேறு விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த மாதம் சுமார் 3 ஆயிரம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், கட்சியின் மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளரான காளியம்மாளும் கட்சியில் இருந்து விலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.