நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின் உத்தரவு

1 week ago 5

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், ஆண்டாபுரம் கிராமம், தெற்குத் தெருவில் வசித்துவரும் இளஞ்சியம் (வயது 50) என்பவர் தனது மகன்வழிப் பேரன் சுஜித் (வயது 5) மற்றும் மகன்வழிப் பேத்தி ஐவிழி (வயது 3) ஆகிய 3 பேரும் நேற்று (7.4.2025) பிற்பகல் 3 மணியளவில் தங்களது தோட்டத்திற்கு சென்றபோது, நேற்று முன்தினம் (6.4.2025) இரவு வீசிய பலத்த மழை மற்றும் காற்றினால் மின் கம்பிகள் சேதமடைந்து விவசாய நிலத்தில் இருந்த இரும்புக் கம்பிவேலி மீது விழுந்தது. இந்த நிலையில், அந்தக் கம்பிவேலியை மேற் சொன்ன 3 பேரும் தொட்டபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article