நாமக்கல்லில் காவல்துறை சார்பில் வீரவணக்க நாள் நிகழ்ச்சி

3 months ago 12

நாமக்கல் அக்.22: நாமக்கல்லில் நடைபெற்ற காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சியில், அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு, பணியின்போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தினார். நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில், காவலர் வீரவணக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் வீர வணக்க நாள் நிகழ்ச்சிக்கு, கலெக்டர் உமா தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி, மாதேஸ்வரன் எம்பி, ராமலிங்கம் எம்எல்ஏ, மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு, பணியின்போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். தொடர்ந்து, காவலர் வீரவணக்க நாள் உறுதிமொழியை அனைவரும் ஏற்றுகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post நாமக்கல்லில் காவல்துறை சார்பில் வீரவணக்க நாள் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article