நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் உயர்வு

2 days ago 4

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 525 காசுகளுக்கு கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. அதனால் நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைகளில் இன்று (திங்கட்கிழமை) 530 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையில் ரூ.3 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன் காரணமாக கறிக்கோழி ஒரு கிலோவின் விலை ரூ.105 ஆக ஆனது.மேலும் முட்டைக்கோழி கிலோ ரூ.97-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலையில் மாற்றம் ஏதுமில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

 

Read Entire Article