நாமக்கல்: பழைய இரும்புக்கடையில் பயங்கர தீ விபத்து - ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

9 hours ago 4

நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரத்தில் முத்துகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமாக பழைய இரும்பு கடை உள்ளது. இந்த கடையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கடையில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் தீ மளமளவென பரவியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை ஒருமணிநேரம் போராடி அணைத்தனர்

இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article