“நான் நிம்மதியாக இருக்கிறேன்... ‘கூண்டுக்கிளி’ ஆக விரும்பவில்லை!” - அண்ணாமலை மனம் திறப்பு

7 hours ago 2

திருவண்ணாமலை: “தற்போது வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். என்னை ஏன் கூண்டுக்குள் அடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் சாமானிய மனிதராக இருப்பதையே ஒரு பவராக பார்க்கிறேன்” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழக முதல்வர் 2026 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரும் எனக் கூறியிருக்கிறார். ஊட்டியில் வெயில் குறைவாக இருந்தால் ஏதாவது பேசத்தோன்றும். அடுத்து சென்னை வெயிலுக்கு வந்தால் முதல்வருக்குத் தெளிந்து விடும். ஊட்டியில் இருப்பதால் அவர் தெளியாமல் இருக்கிறார்.

Read Entire Article