சிவகங்கை: நாட்டரசன்கோட்டையில் கம்பனின் பங்குனி அத்தத் திருநாள் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் கம்ப ராமாயணம் இயற்றிய கவிச்சக்கரவர்த்தி கம்பன் அருட்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி அத்த திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, காரைக்குடி கம்பன் அறநிலை, நாட்டரசன்கோட்டை கம்பன் அறநிலை இணைந்து பங்குனி அத்த திருவிழாவை நடத்தின. சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். கம்பரை தாமரை மலர்களை வைத்து பிரார்த்தனை செய்தார்.