
புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரில் புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவது என முடிவு செய்தது. கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 205 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி விளையாடியது. 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி 190 ரன்களை எடுத்தது. சுனில் நரைன் 3 விக்கெட்டுகளும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தனர். இதனால், கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் , நாங்கள் டாப்-2 இடத்தை பிடிப்போம் என டெல்லி வீரர் விப்ராஜ் நிகம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ,
நாங்கள் இன்னும் முதல் நான்கு இடங்களில் இருக்கிறோம், அது நல்லது. எங்களுக்கு இன்னும் 4 ஆட்டங்கள் உள்ளன, நாங்கள் வலுவாக மீண்டு வருவோம் . டாப்-2 இடத்தை பிடிக்க முயற்சிப்போம். என தெரிவித்தார் .
டெல்லி அணி புள்ளி பட்டியலில் தற்போது 4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்க்கது