“நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதி வயல்களில் 60% தண்ணீர் தேக்கம்” - அமைச்சர் அன்பில் மகேஸ்

3 months ago 17

நாகப்பட்டினம்: “டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, நாகை மாவட்டத்தில் உள்ள 5400 ஹெக்டேர் பரப்பிலான வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அதிகபட்சமாக, தலைஞாயிறு பகுதி வயல்வெளிகளில் 60% தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழை நின்ற பிறகு, சேதங்களைக் கணக்கிட்டு நிவாரணம் வழங்கப்படும்,” என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ள வயல்வெளிகளில் தண்ணீர் சூழந்துள்ளது. திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழையால் பயிர்கள் அழுகியதாக விவசாயிகள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்நிலையில், மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

Read Entire Article