நாகை 3-வது நாளாக கனமழையால் தத்தளிப்பு; டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் சேதம்!

2 months ago 12

நாகை/தஞ்சை: நாகையில் புதன்கிழமை மூன்றாவது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்குள்ளானது. தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட இதர மாவட்டங்களில் மழைநீரில் பயிர்கள் மூழ்கியுள்ளன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நாகை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும், வலுவடைந்து சூறாவளி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புயல் சின்னம் காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 25-ம் தேதி முதல் மழை தொடங்கி விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.

Read Entire Article