
திருவனந்தபுரம்,
நாகர்கோவில் வழியாக எர்ணாகுளம்-மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ரெயில் பயணிகளின் வசதிக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3.10 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் எண்.06165 (ஒரு வழிப்பாதை மட்டும்) திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மதுரை சந்திப்பு சென்றடையும். இந்த ரெயிலானது கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரை, காயங்குளம், கருணாகப்பள்ளி, சாஸ்தாம் கோட்டை, கொல்லம், வர்க்கலா, திருவனந்தபுரம் சந்திப்பு (மாலை 7.20), நாகர்கோவில் சந்திப்பு (இரவு 9.05), வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் வழியாக மதுரை சென்றடையும். இந்த சிறப்பு ரெயில் 16 இரண்டாம் வகுப்பு சேர்கார், 1 ஏசி சேர்கார் மற்றும் 4 இருக்கை வசதிகள் கொண்ட பெட்டிகளுடன் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.