நாகர்கோவில், ஜன.6: நாகர்கோவில் 40வது வார்டு பகுதியில் அதிமுக சார்பில் புதுமண தம்பதிகள், பெண்கள் உள்பட 500 பேருக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. வட்ட செயலாளர் இசங்கை மகாதேவன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் பொங்கல் பொருட்களை வழங்கினார். புதுமண தம்பதிகள் 34 பேருக்கு பொங்கல் பொருட்கள், சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. மற்றவர்களுக்கு சேலை, அரிசி பை உள்ளிட்டவை வழங்கினர்.
அமைப்பு செயலாளர் பச்சைமால், மாவட்ட துணை செயலாளர் சுகுமாறன், அணி செயலாளர்கள் கவுன்சிலர் அட்சயா கண்ணன், ஜெயசீலன், ரபீக், நாஞ்சில் சந்திரன், வக்கீல் சுந்தரம், மண்டல செயலாளர்கள் ஸ்ரீலிஜா, வக்கீல் ஜெயகோபால், ஒன்றிய செயலாளர்கள் பொன் சுந்தர்நாத், ஜெஸிம், இலக்கிய அணி மாநில துணை செயலாளர் சந்துரு, அனிதா மகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post நாகர்கோவிலில் பொங்கல் விழா நலத்திட்ட உதவிகள்: தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வழங்கினார் appeared first on Dinakaran.