நாகர்கோவிலில் தானியங்கி கதவு பெயர்ந்து தொங்கியவாறு ஆபத்தான நிலையில் அரசு பேருந்து இயக்கப்பட்டது. இதனால் பயணிகள், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
படிக்கட்டில் பயணிகள் பயணம் செய்வதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் அரசு பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. தானியங்கி கதவுகளுடன் புதிய பேருந்துகள் நாகர்கோவில் வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.