நாகை : நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். காலையில் வேதாரண்யம் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், நாகை மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, ரூ.2 லட்சம் மதிப்பிலான எஞ்சின், ஜிபிஎஸ், 2 செல்போன்கள், பேட்டரி மற்றும் 30 கிலோ மீன்களை பறித்துச் சென்றனர்.
The post நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் appeared first on Dinakaran.