நாகப்பட்டினம்,ஜன.11: திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 15 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களுக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் அனைத்து மதுபானக் கடைகளும் விடுமுறை என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் வரும் 15ம் தேதி மற்றும் 26ம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் விடுமுறை விடப்பட்டுள்ளது. அன்றைய தினங்களில் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல் appeared first on Dinakaran.