நா.த.க.வில் இருந்து காளியம்மாள் விலகுகிறாரா? - சீமான் பதில்

9 hours ago 1

மதுரை,

நாம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு இருப்பதாகவும், காளியம்மாள் நாதகவில் இருந்து விலக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த சூழலில், நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் காளியம்மாளின் பெயருக்கு பின்னால் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டு இருந்தது. இது, கட்சியில் அவர் இருக்கிறாரா, இல்லையா என்பதில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், தனது முடிவு குறித்து விரைவில் அறிவிப்பதாக காளியம்மாள் கூறியதும் கவனம் பெற்றுள்ளது. 

இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காளியம்மாள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது;

"தங்கை காளியம்மாள் முதலில் சமூக செயற்பாட்டாளராகத்தான் இருந்தார். அவரை கட்சிக்குள் அழைத்து வந்தது நான்தான். காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி எந்த கட்சியிலும் சேரலாம். கட்சியில் இருந்து வெளியேற காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் உள்ளது. கட்சியில் தொடர்ந்து இருப்பதா? அல்லது விலகுவதா? என்பதை காளியம்மாள் முடிவு செய்யட்டும். அதில் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. பருவ காலங்களில் இலையுதிர் காலம் என்ற ஒன்று இருப்பதுபோல் எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம்."

இவ்வாறு அவர் கூறினார்.

 

Read Entire Article