நவ.27, 28, 29-ல் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்

3 months ago 13

சென்னை: வங்கக் கடலில் வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் வரும் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 27, 28 மற்றும் 29 தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, பூமத்திய ரேகையையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று நிலவுகிறது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (நவ.25) தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

Read Entire Article