“நளினியை சந்தித்த பிரியங்கா, ராஜீவ் உடன் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினரை சந்திக்காதது ஏன்?’’ - வானதி சீனிவாசன்

2 months ago 12

சென்னை: “நளினியை சந்தித்த பிரியங்கா காந்தி வதேரா, ராஜீவ் காந்தியோடு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்காதது ஏன்?” என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் தனது சகோதரி பிரியங்கா காந்தியை ஆதரித்து நவம்பர் 3-ம் தேதி பிரசாரம் செய்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, 'எனது தந்தை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய பெண்ணை நேரில் சென்று சந்தித்து கட்டிப்பிடித்துக் கொண்டவர் பிரியங்கா காந்தி. நளினியை சந்தித்து விட்டு வந்த பின்பு என்னிடம் பேசிய பிரியங்கா மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார். நளினி மீது பரிவு காட்டியவர்" என கூறியிருக்கிறார்.

Read Entire Article