நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்களை வீட்டுவசதி திட்டத்தில் அதிகளவில் சேர்க்க அமைச்சர் உத்தரவு

6 months ago 18

சென்னை: கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களை, வீட்டுவசதித் திட்டத்தில் அதிகளவில் சேர்க்கும்படி அமைச்சர் சி.வெ.கணேசன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, தலைமைச்செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் பணிகள் குறித்து இன்று (நவ.8) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியது: “தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு அல்லது தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளை சொந்தமாக ஒதுக்கீடு பெறுவதற்கு ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

Read Entire Article