தர்மபுரி, ஜன. 18: பாலக்கோடு அடுத்த கூத்தாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் அன்பரசு மகள் சுஜாதா(19). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்து விட்டு, ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 13ம் தேதி பொங்கல் விடுமுறைக்காக சுஜாதா வீட்டிற்கு வந்திருந்தார். கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சுஜாதா, பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான சுஜாதாவை தேடி வருகின்றனர்.
The post நர்சிங் பயிற்சி மாணவி மாயம் appeared first on Dinakaran.