விழுப்புரம், நவ. 14: விழுப்புரம் அருகே தாதம்பாளையத்தை சேர்ந்தவர் கண்ணன்(50), விவசாயி. இவர் நேற்று தனது நிலத்திற்கு சென்றபோது மழை பெய்ததால் குடையுடன் சென்றார். அப்போது தாழ்வாக சென்ற மின் கம்பி மீது குடை பட்டதில், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வளவனூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post நந்தீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.