பாதுகாப்பாக பணியாற்ற மின்​ ஊழியர்களுக்கு ரூ.1.59 கோடியில் பயிற்சி

4 hours ago 3

சென்னை: மின்வாரிய கள பணியாளர்களுக்கு ரூ.1.59 கோடியில் சிறப்பு பாதுகாப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மின்தடை உள்ளிட்ட கோளாறுகளை சரிசெய்யும் கள பணியாளர்கள் சில நேரங்களில் விபத்துக்கு உள்ளாகின்றனர். இதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு செயலி மூலம் அவர்களது செயல்பாடுகளை மின்வாரியம் கண்காணிக்கிறது. இருப்பினும், எதிர்பாராதவிதமாக சூழல்களில் அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்துவிடுகின்றன. இதில் பெரும்பாலும் கேங்மேன் எனும் தற்காலிக ஊழியர்களே பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை தடுக்கும் விதமாக, பணியாளர்களுக்கு சீரிய முறையில் பாதுகாப்பு பயிற்சி வழங்க வேண்டும் என மின்வாரிய தலைவரிடம் பிஎம்எஸ் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கோரிக்கை வைத்தன.

Read Entire Article