![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/09/38404248-aka.webp)
ஐதராபாத்,
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது.
இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகி முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிகின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 25-ந் தேதி வெளியாக உள்ளநிலையில், தற்போது படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் ஆதி இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் இவர் நடிக்கும் முதல் படமாக இது இருக்கும். மேலும், 'சரைனோடு' படத்திற்குப் பிறகு இயக்குனர் போயபதி சீனுவுடன் ஆதி இணையும் 2-வது படமாகவும் இது இருக்கும்.